
ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் பிரவேசித்த போது, ஜனாதிபதி மாளிகையில் படுக்கை விரிப்பை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று (26) தீர்மானித்தார்.
சந்தேகநபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவானால் அழைக்கப்பட்ட வேளையில், சம்பவம் தொடர்பான உண்மைகளை கருத்திற்கொண்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட சந்தேக நபரை 09.00 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
பிற செய்திகள்