அப்பாவி மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் தொடரும்-றஞ்சன் உறுதி!

தாம் சுதந்திரமாக இருந்து மக்கள் பக்கம் செல்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை பெற்று வெளியேறும் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் முன்னாள் எம்.பி. “நான் அரசியலில் ஈடுபடுவேன், தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்” என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டின் அப்பாவி மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கைகளையும் நான் தொடருவேன்” என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *