
யாழ் ஓக 26
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற, வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட கடல்சார் ஆய்வு கலந்துரையாடலில் காணொளி ஊடாக கலந்து கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்புரை ஆற்றினார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆய்வுக் கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் துறைசார் திணைக்களத்தினர் கலந்து கொண்டனர்