ஜோன்ஸ்டனின் வீட்டுக்கு தீ வைத்ததாக GMOA அதிகாரி மீது குற்றச்சாட்டு

நாட்டில் கலவரம் இடம்பெற்ற நாட்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் விலேகொடவில் உள்ள வீடு எரிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குருநாகல் மாவட்டக் கிளையின் அழைப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில் நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க குருநாகல் பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தர விடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *