மின்சார முச்சக்கரவண்டிகளுக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்ற ஆர்வமுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பாவனை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக மின்சார முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *