ஒரு நாள் தான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேன், ஆனால் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை என சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சன் ராமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மக்களிடமிருந்து என்னை எவரும் பிரித்தெடுக்கவே முடியாது. நான் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பேன். எனது விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள். எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. எனது விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
நான் எவருக்கும் பயந்து அடிமையாக இருக்கமாட்டேன். மக்களிடமிருந்து என்னை எவரும் பிரித்தெடுக்கவே முடியாது. நான் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பேன்.
நான் அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்.

இந்த நாட்டின் அப்பாவி மக்களை வதைத்து – நாட்டைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக எனது நடவடிக்கைகள் தொடரும்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நீதியமைச்சர் தமக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இறப்பதற்கு முன் மீண்டும் அரசியலுக்கு வந்து வாக்களித்த மக்களுக்கு உழைக்க விரும்புகிறேன். எனவே எனக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் வாக்குறுதியளித்தேன்.
இதில் கையொப்பமிட என்னைப் பரிந்துரைக்கும் முன் அவர் என்னிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக உறுதியளித்தால் மட்டுமே மன்னிப்பு வழங்கப்படும் என. எனவே மக்கள் நான் திருடர்களைப் பிடிக்க விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். அது தொடர அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்