
கொழும்பு,ஓக 26
இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு சீனா எப்போதும் சர்வதேச ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது எனவும் அவர் மேலும் தெரிசித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் இறையான்மை மற்றும் சுதந்திரத்தினை அண்டைய நாடுகள் ஆதரமற்ற கருத்துக்களை முன்வைத்து கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது மாநாடு அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த அமர்வின் போது இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தும் நாடுகள் இலங்கையின் பொருளூதார நெருக்கடி நிலைமை தொடர்பிலும் பேச்சுக்களை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.