முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மன்னிப்பின் பிரகாரம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது.
“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 34 (1) பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, இது நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு, அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெறுவதற்கு அரசியலமைப்பின் 34 (2) வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்” என்று நீதி அமைச்சின் அதிகாரி ரகித ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்டத்தின்படி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நபர், ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், 7 ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் குடிமை உரிமைகளை இழக்க நேரிடும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் சிறையில் இருந்தபோது அவர்களுக்கு பூரண ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.
இதேவேளை, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து அவரது முன்னாள் கட்சி உறுப்பினர்களுக்கான குறிப்புடன் ட்வீட் செய்திருந்தார்.
“எனது அரசியல் முடிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உங்கள் பங்கைச் செய்யும்போது, அவற்றைப் படங்களிலும் ஊடகங்களிலும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, எனது நண்பர் ரஞ்சன் ராமநாயக்கர் சுதந்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி. அதுதான் எனக்கு முக்கியம். – என்றார்.
பிற செய்திகள்