நீர் கட்டணங்கள் அதிகரிப்பு: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

கொழும்பு,ஓக 26

இலங்கையில் குடிநீர் மற்றும் வடிகால் அமைப்புக்குரிய கட்டணங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சார கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *