பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனம்: பேரழிவு தரும் வெள்ளத்தில் ஏறக்குறைய 1,000பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிட்டத்தட்ட 1,000பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்குமிடமின்றி உள்ளனர்.

இந்த கன மழையைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் வெள்ளத்தை ‘தேசிய அவசரநிலை’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜூன் நடுப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 937 பேர் இறந்துள்ளனர். இதில் 343 குழந்தைகள் உள்ளனர்.

தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, இது 2010ஆம் ஆண்டு பேரழிவுகரமான வெள்ளத்தின் நினைவை மீண்டும் கொண்டு வருகிறது.

உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுசிஸ்தான் மற்றும் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு முறையே 234 மற்றும் 306 பேர் நாடு முழுவதும் அரை மில்லியன் வீடுகளை பாதித்த சாதனை மழைக்கு மத்தியில் உயிரிழந்தனர்.

நான்கு மாகாணங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டா நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் பல நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *