இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட கருத்து!

அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதாவது,தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த,இந்த நேரத்தில், ஒரு நாடாக நாம் தீர்மானிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட அந்நியச் செலாவணி எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.

மேலும்,எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டு வருவதாக அல்லது கையடக்க தொலைபேசி, கார், தொலைக்காட்சி கொண்டு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

அத்தியாவசிய விடயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டால், இது போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அதனால்தான் அத்தியாவசியமற்றவை தடை செய்யப்பட்டன.

இவை தற்காலிகமான விடயங்கள். சில தொழில்கள் பாதிக்கப்படும் என்பதை அறியாமல் இது செய்யப்படவில்லை. ஆனால் இந்த கட்டத்தில் முக்கியமான விடயம், வரையறுக்கப்பட்ட வளங்களை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துவதாகும்.

பிற செய்திகள்

இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது உக்ரைன்!

இன்றைய தினத்திற்க்கான மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

நீர் கட்டணம் அதிகரிப்பு: வர்த்தமானி வெளியீடு!

ஏறாவூர் வன்முறை: சந்தேக நபர் சரணடைந்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *