சட்ட விரோதமாக கரையோரத்தை கையகப்படுத்தியோர் மீது நடவடிக்கை!

கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட காக்காமுனை மற்றும் அதனை அன்டிய பிரதேசங்களில் நேற்றைய (26) தினம் திருகோணமலை கரையோரப் பாதுகாப்பு தினைக்களம் மற்றும் கிண்ணியா பொலிசார் இனைந்து சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.

 இதன் போது சட்டவிரோதமான முறையில் அனுமதி இன்றி அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட கரையோர மற்றும் களப்பு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உறிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கரையோர பாதுகாப்பு தினைக்களத்தின் பிராந்திய பொறுப்பதிகாரி கமகே தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் கிண்ணியா பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் சனீஸ் உற்பட கிண்ணியா பொலிசாரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *