முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த மற்றுமொரு தோல்வி!

அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *