யாழில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *