
கொழும்பு, ஓக 27
பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதியின் நடுவே கட்டப்பட்டிருந்த குறுகிய தடுப்புச்சுவர் மீது மோதிய முச்சக்கர வண்டி, தலைகீழாகச் சென்று சிறிது தூரம் சென்று நின்றது.
அப்போது முச்சக்கரவண்டியின் அடியில் சாரதி வீழ்ந்ததில் அதில் பயணித்த பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.