கம்பஹா துப்பாக்கிச்சூடு சம்பவம்: 5 பேர் கைது

கம்பஹா, ஓக 27

கம்பஹா பிரதேசத்தில் அழகு நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுக்கு இடைப்பட்ட பெத்தியகொட, மகேவிட்ட மற்றும் கொட்டுகுடா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கு பயன்படுத்திய ரிவால்வர் மற்றும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *