புதிய வீரருடன் களமிறங்கும் இலங்கை அணி

கொழும்பு, ஓக 27

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27) ஆரம்பமாக உள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இதுவரை ஒரு ரி20 போட்டி நடைபெற்றுள்ள நிலையில், அந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை விளையாட வாய்ப்பு உள்ளதாக அணித்தலைவர் தசுன் ஷானக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *