உள்ளுர் திரவ பால் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை உள்ளூர் பால் பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமது தொழிலை இனிமேலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள உள்ளூர் தொழில்களில், திரவ பால் உற்பத்தித் துறையானது பொருளாதார செயல்முறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியால், உள்ளூர் பால் பண்ணையாளர்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
விவசாயப் பிரதேசமான மின்னேரிய கிரிதலே காலனியில் கணிசமான மக்கள் பால் பண்ணை தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
ஆனால் தற்போது கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் பால் பண்ணையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேவேளைபால் மா இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் உள்ளுர் பால் உற்பத்தித் தொழிலை மேலும் மேம்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பல்லவா என்றும் பால் பண்ணையாளர்கள் கேள்வி எமுப்பியுள்ளனர்.
பிற செய்திகள்