கௌரவத்துடன் கூடிய உரிமையை பெற்றுத்தருமாறு கோரி திருமலையில் போராட்டம்

திருமலை, ஓக 27

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவத்துடன் கூடிய உரிமையை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டமானது திருகோணமலை – வெருகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூறு நாட்கள் செயல்முனைவு என்ற தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தமக்கான உரிமை கிடைக்க வேண்டும் , காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்க வேண்டும் மற்றும் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *