ஐஸ் போதைப்பொருள் கடத்திய பிச்சைக்காரன் கைது

கொழும்பு, ஓக 27

பிச்சை எடுத்து சம்பாதித்த பணத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு, சம்பந்தப்பட்ட நபரிடம் ஐஸ் போதைப்பொருளையும் கண்டுபிடித்தனர்.

பின்னர், சந்தேக நபரின் சகோதரி ஒருவரிடம் வீட்டில் உள்ள பணம் குறித்து கேட்டபோது, ​​பிச்சை எடுத்து சம்பாதித்த பணம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *