
கொழும்பு, ஓக 27
கடவத்த பிரதேசத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேலியகொடையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுபொத்த மற்றும் மாவத்தகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேன் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.