சீனாவின் Yuan Wang 5 தொடர்பில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

சீனாவின் Yuan Wang 5 ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில்,சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தை ஆய்வு செய்து வருவதாக இட்ந்திய ஊடகமான The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்,கடந்த 22 ஆம் திகதி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த கப்பல், சீனாவிலுள்ள ஜியாங்யின் துறைமுகத்திற்கு நேரடியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஹம்பந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் ஆய்வு செய்து வருவதாக The Hindu செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின், தென் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிலைகொண்டு, ஆய்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், Yuan Wang 5 , ஜியாங்யின் துறைமுகத்திற்கு செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்திற்கு செல்லுமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன கப்பல் நங்கூரமிட்ட சம்பவம் தொடர்பில், இந்தியா , இலங்கைக்கு இடையில் பிரச்சினையொன்று ஏற்பட்டதாக எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

குறிப்பாக,எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் இவ்வாறான பிரச்சினைகளின் ஊடாக இருதரப்பு நம்பிக்கை சீர்குலையும் செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் இருப்பதற்குமான திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இவற்றை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடபிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *