புத்தளம் – முள்ளிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியின் 3 வது பட்டமளிப்பு விழா இன்று (27) இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எல்.எம்.சனூஸ் (ரஹ்மானி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் ஹழ்ரியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் நஜூமுதீன் முப்தி விஷேட பேச்சாளராக கலந்துகொண்டார்.
இதன்போது, ஹாபில் மற்றும் மௌலவி பட்டம் பெற்ற 50 மாணவர்களுக்கு அதிதிகள் சான்றிதழ் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் கல்விமான்கள், அரபு கல்லூரிகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், மதரஸா மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்