யாழில் பல இடங்களில் திருட்டு:ஒருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்க்களில் குப்பிளான் மற்றும் புன்னாலை கட்டுவன் பகுதிகளில்  நீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திரங்கள்,துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு போனதாக தெரிவித்து முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குப்பிளான் வடக்கு கம்பம் புலம் பகுதிக்கு விரைந்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரவினர் 7துவிச்சக்கர வண்டிகள் ,4மோட்டார்,2எரிவாயு சிலிண்டர்களை கைப்பற்றியதோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 80மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றினர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *