150 பில்லியன் ரூபாவினை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய இந்த தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிதி செலுத்தமையினால் 4 ஆயிரம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது தொழில் வாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஓதுக்கப்படும் நிதியை விட அரச அதிகரிகள் தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு இணக்கம் தெரிவித்து அதிக நிதியை செலவிட்டமையே இதற்கு காரணமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *