வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 2022ஆம் ஆண்டு பெரும் திருவிழாவின்போது சப்பறம், தேர், தீர்த்தத்திருவிழாக்களின்போது தொண்டர் சேவையாற்றிய இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27.08.2022 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் சிவகுரு ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஆதீனதொண்டர்கள், ஆன்மீகப்பெரியார்கள், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத்தொண்டர் சபை தேசிய ஆணையாளர் சிவத்திரு.வை.மோகனதாஸ், மகளிர் பொறுப்பாசிரியர் கேதீஸ்வரி, தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு.வை.ஜெகதாஸ், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறபுற இடம்பெற்றது.
பிற செய்திகள்