மீனவர்கள் கைதை கண்டித்து – ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது என ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர்.ஜேசுராஜா தெரிவித்தார்.

நேற்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் அழைத்து சென்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வேலை நிறுத்தத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதோடு நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *