
கொழும்பு,ஓக 28
இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியோடு ஆசிய கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஆரம்பமாகியது.
இப்போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை விட பெத்தும் நிஸ்ஸங்கவின் ஆட்டமிழப்பின் போது நவீன தொழில்நுட்பமும் தோற்றுவிட்டது என பேசப்படுகிறது.
இந்த ஆட்டமிழப்பு தவறானது என்பதை ஆப்கானிஸ்தான் அணி தலைவர் மொகமட் நபியும் குறிப்பிட்டிருந்தார்.
3ஆவது நடுவரின் பிழையான தீர்ப்பு இலங்கை அணியை எதிர்பாராத தோல்விக்கு கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது.