
கொழும்பு, ஒக். 28:
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அஸ்கிரி மகா விகாரையினால் “மஹாமான்ய பிரதபாதிகேஷ்வர” என்ற கௌரவப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கும், பெளத்த மதத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சவேந்திர சில்வா ஆற்றிய சேவைகளை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரி மகா விகாரை தெரிவித்துள்ளது.