மன்னாரில் கணிய மண் அகழ்வுக்கு எதிராக விழிப்புணர்வு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் கணிய மண் அகழ்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த கோரியும் மன்னார் தீவுப்பகுதிக்குள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கு காற்றாலை மின்செயற்திட்டத்தை நிறுத்த கோரியும் பொது அமைப்புக்களால் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணிதொடக்கம் விழிப்புணர்வு போராட்டம் இடம் பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள்,மக்கள் பிரதி நிதிகள் சமூக செயற்பாட்டாளர்கள்,மீனவ சங்கங்கள்,தனியார் பேரூந்து சேவையினர் உட்பட பலரும் இணைந்து நாளைய தினம் மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மன்னார் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் மன்னார் தீவின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு பொதுமக்களையும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *