உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி தடை காரணமாக சந்தையில் ஏற்படக்கூடிய பால் உற்பத்தி பொருட்களின் பற்றாக்குறையினை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, உள்நாட்டில் பால் மா மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இறக்குமதி தடையினால் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக, குறித்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *