ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி, செப்டம்பர் 06 ஆம் திகதி 77 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
இந்நிலையில் 76 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ‘ஒன்றிணைவோம்’ என்ற மகுட வாசகத்துடன் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கட்சி தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள வருடாந்த சம்மேளனத்தில், கட்சி பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.
அதேவேளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்