திருகோணமலையில் கொரோனா தாக்கம் தீவிரம்! வைத்தியர் வீ.பிரேமானந்த்

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது என திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (20) சனிக்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 4 வரை 102 கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளர்.

இந்த நிலையில் ஒக்டோபர் 5 தொடக்கம் ஒக்டோபர் 11 வரை 200 புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் கொரோனா தொற்று அதிகரிப்பை எடுத்துக் காட்டுகிறது என தெரிவித்தார்.

மேலும், நவம்பர் 12 தொடக்கம் 18 வரை 291 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள்

இதில் இறப்புக்களின் எண்ணிக்கையானது ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 4 வரை மூவரும் , நவம்பர் 5 தொடக்கம் 11 வரை மூவரும், நவம்பர் 12 தொடக்கம் 18 வரை ஐந்து உயிரிழப்புக்களும் கொரோனா மரணங்களாக பதிவாகியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *