இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 148 ஓட்டங்கள்!

ஆசியக் கிண்ணத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 148 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் இந்திய அணி இன்னும் சற்றுநேரத்தில் 148 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *