பைஷர் தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது எனவும் அரசாங்கம் மாற்று வழிகளைத் தேட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பைஷர் தடுப்பூசி ஒரு RNA தடுப்பூசி எனவும், மரபணு மனித உடலில் நேரடியாக செலுத்தப்பட்ட பின்னர் அது எவ்வாறு செயற்படும் என்பதை எவராலும் கணிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
முதன்முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசிகளில் RNA பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஒரு மருத்துவ நிபுணராக தனக்கு பைஷர் தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே பைஷர் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக இறக்குமதி செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளைத் தேடுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.