
“தனது இனத்துக்காக, மண்ணுக்காக எதையும் எதிர்பாராமல் போராடி, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கான வாய்ப்பை இந்த அரசு தடுக்க முற்படுகின்றது. அவ்வாறு தடுப்பதால் எமது மக்கள் மௌனம் காக்கமாட்டார்கள். இனத்துக்காக வீறுகொண்டெழுவார்கள். எனவே, தடை உத்தரவுகளைப்பெறும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இது கார்த்திகை மாதம். எனவே, கார்த்திகை மாத நினைவேந்தலை தடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்றுவருகின்றனர். எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தொடர்பான அறிவித்தல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது போர் இல்லை. எனினும்,
தமது உறவுகளை நினைவுகூருவதற்கான வாய்ப்பை உறவினர்களுக்கு வழங்கிவிட்டால், அவர்களை நினைத்து, அழுது கவலையை வெளிப்படுத்தி மக்கள் சாதாரணமாக இருந்துவிடுவார்கள்.