
வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில், கோப்பாய் மாத்தி பகுதியைச் சேர்ந்த சின்னையா அழகானந்தம் (வயது -77) என்பவரே உயிரிழந்தார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சென்றுகொண்டிருந்த அவரை, அவருக்குப் பின்பாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில், நேற்று உயிரிழந்தார்.
இறப்பு விசாரணையை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது