
ஒரு மாதத்துக்கு முன்னர் பிரிட்டனிலிருந்து தாயகம் வந்த இளைஞர், அதிதீவிர நோய்ப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் தற்போது வசித்து வந்த நடராசா நிதிஷ்குமார் (வயது -29) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் நேற்றுமுன்தினம் மூச்சு விடுவதில் சிரமப்பட்டுள்ளார். அதனால் அவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் நேற்றுக்காலை உயிரிழந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.