முன்னதாக அறியப்படுத்தியதற்கு அமைய, இன்றைய தினம் முன்னிலையாக முடியாது என அமைச்சர்களான பந்துல குணவர்தன பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்பதால், அதற்காக பிறிதொரு தினத்தை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மே 9 மற்றும் அதற்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதேச சபை தலைவர்கள் பலர் இன்று மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்