வரலாற்று சாதனை படைத்த மாணவன் நந்தகுமார் விதுர்ஷன்!

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவன் நந்தகுமார் விதுர்ஷன் வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதாவது,செட்டிகுளம், கரப்பைமடு எனும் கிராமத்தில் வசித்து வரும் நந்தகுமார் விதுர்ஷன் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினை பெற்றுள்ளதுடன், அவரது கிராமத்திற்கும் பெருமையினை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அத்துடன், செட்டிக்குளம் மகாவித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3ஏ சித்திகளை பெற்ற முதல் மாணவன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *