சிசில் வசந்த பிணையில் விடுதலை!

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கில், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, பொலிஸாருக்கு, இன்று (29) கட்டளையிட்டார்.

இந்நிலையில்,இன்றையதினம் நீதவான் விசாரணை இடம்பெற்ற போது, முதலாவது சந்தேகநபரான டனிஸ் அலி குறித்த விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று கறுவாத்தோட்டம் பொலிஸார், மன்றுக்கு அறிவித்தனர்.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதியன்று, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசில் வசந்த என்ற சந்கேநபரை 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்,கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதியன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வைத்து டனிஸ் அலி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *