சர்வேதச காணாமல் ஆக்கப்பட்ட தினமான நாளை மாபெரும் போராட்டத்துக்கு வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சங்கத்தின் தலைவர்,செயலாளர் கருத்து தெரிவிக்கையில்:
நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தினத்தில் கோட்டபாய மற்றும் மஹிந்த ஆகியோர் சர்வதேச நீதி மன்றில் முன்னிலையாக வேண்டும்.சர்வதேச விசாரணை மற்றும் நீதி வேண்டும் என்று கோரிக்கையை முவைக்கவுள்ளளோம்.
13 வருடங்கள் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள்,சரணடைந்தவர்கள் என பல உறவுகளை நாம் அன்றைய அரசிடம் கையளித்தோம்.இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று எமக்கு தெரியவில்லை.
அத்துடன் தற்போது வரை எமக்கு அரச புலனாய்வாளர்கள் உட்பட பலரால் எமக்கு அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே உள்ளது.மட்டுவில் சம்பவத்தில் எங்களை கைது செய்யும் நடவடிக்கை கூட முன்னெடுக்கப்பட்டது.
ஆகவே எமது தமிழ் உறவுகளுக்காக நாளைய தினம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவில் முன்பாக ஒன்றுகூட வேண்டும்.அங்கே இருந்து போராட்டம் ஆரம்பித்து வவுனியா பேருந்து நிலையத்தில் நிறைவடையும் என தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்