
கொழும்பு,ஓக 29
இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் மீது கவனம் செலுத்துமாறு கோரி, போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள் இன்று கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி மௌனப் போராட்டத்திலும் இந்த குழுவினர் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்திய போராட்டக்காரர்களை தடுத்து வைக்க கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தியதற்காக இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச எதிர்ப்புக்கு உட்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசாங்கத்துக்கு எதிரான பேரணியின் போது வசந்த முதலிகே உட்பட மூன்று செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை நீதித்துறை மறுஆய்வு இல்லாமல் 90 நாட்கள் காவலில் வைக்க பயங்கரவாத சட்டம் அனுமதிக்கிறது என்றும் போராட்டக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.