நெல் கொள்வனவில் சிக்கல்!

அரச வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 300 மில்லியன் ரூபாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில்,விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வைப்பிலிடப்பட்ட பணமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கிக்கு சந்தைப்படுத்தல் கடன் தவணை செலுத்த வேண்டியுள்ள நிலையிலேயே வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதை தடுக்கும் நோக்கில் நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்ய சபை தீர்மானித்தது.

இந்நிலையில், பணப் பிரச்சினை காரணமாக கொள்வனவில் பிரச்சினை ஏற்படக் கூடும் என்று பேச்சாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *