பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்கவின் வீட்டை எரித்தவர் கைது!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு மற்றும் அலுவலகம் என்பனவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்னாண்டோவின் தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடு மற்றும் அவரது அலுவலகம் என்பனவற்றின் மீது கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அவை தீ மூட்டி எரிக்கப்பட்டன.

இந்த தாக்குதலில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் வீடு மற்றும் அலுவலக சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *