விழுது நிறுவனத்தின் சமுதாயசங்கிலி வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

இன்றையதினம் விழுது நிறுவனத்தின் திட்டத்தின் கீழ் கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக மீழ்சுழற்சி பயன்பாட்டிற்கென சமுதாயசங்கிலி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில்,இதில் சர்வ மத இளையோர்கள் இணைந்து, சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இனம், மதம்ஃ மொழிகள் போன்றவற்றை கடந்து நல்லிணக்க செயற்பாடாக இதனை முன்னெடுத்தனர்.

குறித்த சிரமதானக் குழுவினர் குருநகர் கடற்கரை பகுதியில் மீனவர் கடலுக்கு செல்லும் பாதையில் வீசப்பட்டு இருந்த குப்பைகளினை அகற்றி பிளாஸ்ரிக் கழிவுகள் ஏனைய கழிவுகள் என தரம்பிரித்து காக்கைதீவு மீழ்சுழற்சி மையத்திற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *