யாழில் போதைப்பொருள் பயன்படுத்திய இரண்டு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 28 மற்றும் 29 வயதுடையோர் எனவும் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *