
கிளி, ஓக 30
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீதியால் பயணித்த பெண் ஒருவரின் தங்கச்சங்கலியினை அறுத்த இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்ற தடுப்புபொலிஸ் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி பகுதியில் வீதியால் பயணித்த பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்ய முற்பட்டபோது சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வீதியில் சென்றவரிடம் அறுத்த ஒன்ரரை பவுண் சங்கிலி மீட்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலீஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்