இலங்கைக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும்: ஜூலி சங்

கொழும்பு, ஓக 30

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக  அமெரிக்கா  ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அமெரிக்கா வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் கொழும்பில்  நடைபெற்ற அமெரிக்கா – இலங்கை வணிக பேரவையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி உதவி, விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள், அரச நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சி போன்றவற்றை இரட்டிப்பாக அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *