சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலை; மோசடி குறித்து சிஐடி விசாரணை!

சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் கொள்ளையர்கள் குறித்து விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மலேசியாவுக்குள் நுழைந்தவுடன் சுற்றுலா விசாவை பணி விசாவாக மாற்றலாம் என குழுக்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், இவ்வாறான மோசடியாளர்களிடம் ஏமாறுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னர் பயண முகவரின் நம்பகத்தன்மையை விசாரிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *